அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் 2-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்ட நிலையில் கனிமொழி சுட்டுரையில் கூறியிருப்பது:
ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்.
துரதிருஷ்டம்: ஆனால், அவரின் இறுதி நாள்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது என்று அவர் கூறியுள்ளார்.