மேக்கேதாட்டு விவகாரம்: டிச. 14-இல் கூடுகிறது புதுவை பேரவை

மேக்கேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், புதுவை சட்டப்பேரவை வருகிற 14-ஆம் தேதி கூட உள்ளது.


மேக்கேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், புதுவை சட்டப்பேரவை வருகிற 14-ஆம் தேதி கூட உள்ளது.
மேக்கேதாட்டில் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையிலும் சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக, திமுக கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் டிச. 5-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தில் தர்னாவில் ஈடுபட்டனர்.
அப்போது, முதல்வர் நாராயணசாமியிடம் கலந்து பேசி சட்டப்பேரவைக் கூடும் தேதியை விரைவில் அறிவிப்பதாக பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் தர்னாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து, புதுவை சட்டப்பேரவையைக் கூட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியானது. அதன்படி, வருகிற 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com