இந்த நாள் இனிய நாள்: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கனிமொழி ட்வீட் 

'இந்த நாள் இனிய நாள்' என்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார். 
இந்த நாள் இனிய நாள்: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கனிமொழி ட்வீட் 

சென்னை: 'இந்த நாள் இனிய நாள்' என்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார். 

ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் செவ்வாய் காலை 8 மணியில் இருந்து வெளிவரத் துவங்கியுள்ளன. 

இதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரியா சமிதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பிடித்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அரிதிப் பெரும்பான்மையைப் பிடிக்க நெருக்கடி நிலை நிலவுகிறது. 

இந்நிலையில் 'இந்த நாள் இனிய நாள்' என்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது  
 
பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட #AccheDin இதோ இன்று  வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

முன்பு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பாஜக தனது தேர்தல் பிரசாரத்தில், தாங்கள் ஆட்சிக்கு வரும் நாளே சாமானியனுக்கு நல்ல நாள் என்று கோரி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com