கேரள எஸ்.பி.க்கு எதிராக மக்களவையில் பொன். ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ்

சபரிமலைக்குச் சென்று போது தன்னுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்திய கேரள எஸ்.பி.க்கு எதிராக மக்களவையில் பொன். ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்து பேசினார்.
கேரள எஸ்.பி.க்கு எதிராக மக்களவையில் பொன். ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ்


புது தில்லி: சபரிமலைக்குச் சென்று போது தன்னுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்திய கேரள எஸ்.பி.க்கு எதிராக மக்களவையில் பொன். ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்து பேசினார்.

மக்களவையில் இன்று பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இருமுடி ஏந்தி தான் சபரிமலைக்குச் சென்ற போது நேரிட்ட அனுபவங்கள் குறித்து விளக்கினார்.

சபரிமலையில் கேரள அரசின் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். சபரிமலையில் போலீசார் தேவையின்றி பக்தர்களின் வாகனங்களை தடுத்தி நிறுத்தி பிரச்னை செய்கிறார்கள். நிலக்கல் அருகே தன்னுடன் வந்தவர்களின் வாகனங்களை கேரள காவல்துறை எஸ்.பி. தடுத்தி நிறுத்தி, அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதுபோன்ற கெடுபிடிகளால் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com