நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கும் என பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யம்
நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கும்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி


சென்னை: நேர்மையாக செயல்படும் அனைவருக்குமே அரசியல் அழுத்தம் இருக்கும் என பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் பேசுகையில், நேர்மையான அதிகாரிகள் மீது அரசியல் அழுத்தம் இருக்கும், அதனை புறந்தள்ளிவிட்டு அதிகாரிகள் பணிபுரியவேண்டும்.  

ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் படிப்படியாக, ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்; வங்கி கணக்கிற்கு பணம் வந்தால் நல்லது தான்.

சீதக்காதி படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தது பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளிக்கையில், படங்களின் மீது வழக்கு போடுவது, எனது படங்களில் இருந்து துவங்கியது என்பது வருத்தம் அளிக்கிறது. படத்தை பார்த்து விட்டு, தவறுகள் இருந்தால் பின்னர் கருத்து தெரிவிக்க முடியும் என்றவர் நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது என்றார் கமல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com