தினமணி திருநெல்வேலி பதிப்பில் புகைப்படக்காரராக பணிபுரிந்த பூ.வீரமணிகண்டன் (41) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானார்.
தினமணியின் மதுரை, திருச்சி, கோவை பதிப்புகளிலும் பணியாற்றியுள்ள இவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை காலமானார். அவருக்கு கங்கா என்ற மனைவியும், செல்வி என்ற மகளும் உள்ளனர்.
மணிகண்டனின் இறுதிச்சடங்கு, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகேயுள்ள குறிச்சி, மருதுபாண்டியர் 2-ஆவது தெருவில் உள்ள அவருடைய இல்லத்தில் வியாழக்கிழமை காலையில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 8838727903.