• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு தமிழ்நாடு

கும்பகோணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது பழனி கோயில் அபிஷேகமூர்த்தி சிலை

By DIN  |   Published on : 12th July 2018 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

palani

பழனி மலைக்கோயில் அபிஷேக மூர்த்தி சிலையின் எடையை புதன்கிழமை சரிபார்த்த கோயில் இணை ஆணையர் செல்வராஜ், சிலைக் கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி., ராஜாராம், டி.எஸ்.பி., வெங்கட்ராமன், 

பழனி மலைக்கோயிலில் மூலவர் சிலை முன் வைக்கப்பட்ட அபிஷேக மூர்த்தி சிலையை, சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார், கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை கொண்டு சென்றனர். 
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு மூலவர் தண்டாயுதபாணி சிலை முன், மூலவரை மறைக்கும் வகையில் சுமார் மூன்றரை அடி உயர ஐம்பொன்னாலான அபிஷேக மூர்த்தி சிலை நிறுவப்பட்டது. பக்தர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த சிலை அகற்றப்பட்டது. இரட்டைப்பூட்டு அறையில் வைக்கப்பட்ட இந்த சிலைக்கு ஒருகால பூஜை மட்டும் நடைபெற்று வந்த நிலையில் சிலை தயாரிப்பில் நான்கு உலோகம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளதையும் சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக கோயிலின் முன்னாள் இணை ஆணையர் கே.கே. ராஜா, ஸ்தபதி முத்தையா, உதவி ஆணையர் புகழேந்தி, நகை சரிபார்ப்பு அலுவலர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 
இந்நிலையில் பழனிக்கோயில் தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து நான்கு உலோகத்தாலான சிலைக்கு பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் எனக்கருதிய சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார் சிலையை தங்கள் பொறுப்புக்கு கொண்டு செல்ல நீதிமன்ற உத்தரவு பெற்றனர். 
அதையடுத்து அபிஷேக மூர்த்தி சிலையை கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல ஏடிஎஸ்பி., ராஜாராம், டிஎஸ்பி., வெங்கட்ராமன், ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை பழனி வந்தனர். 
சிலையை வெளியூர் கொண்டு செல்லும் பொருட்டு மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டு, கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை, நைவேத்தியம் காட்டப்பட்டு பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர், சாயரட்சையின்போது இரட்டை பூட்டு அறையில் இருந்த அபிஷேக மூர்த்தி சிலை வைக்கோலால், தெர்மாகோல் சுற்றப்பட்டு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டது. புதன்கிழமை காலை ஏழு மணியளவில் சிலை வெளியே எடுத்து தராசில் எடை பார்க்கப்பட்டது. பின்னர், மீண்டும் பெட்டியில் வைத்து இழுவை ரயில் மூலம் அடிவாரம் கொண்டு வரப்பட்டது. 
அதைத்தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியர் சரவணன் முன்னிலையில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் ஆகியோர் சிலையை சிலைக்கடத்தல் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். பின்னர் சிலை மீண்டும் எடை பார்க்கப்பட்டு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டது. சிலை 221 கிலோ எடையும் 111 செ.மீ உயரமும் உள்ளது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்
திருவாரூர் பூந்தோட்டம் சிவன்கோயில்
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா
90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்

வீடியோக்கள்

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
இரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்