ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் போலீஸ் குவிப்பு

சர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் வியாழக்கிழமை இரவு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் போலீஸ் குவிப்பு

சர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் வியாழக்கிழமை இரவு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
 சர்கார் படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிட்டுள்ளது போன்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. இதையடுத்து, சென்னை, மதுரை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் அதிமுகவினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் வியாழக்கிழமை நள்ளிரவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவுக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவரது பாதுகாப்புக்காகவே போலீஸார் அவரது வீட்டில் குவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com