மக்கள் வெற்றி பெற வேண்டும்: கமல்ஹாசன்

தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைவிட, மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.
மக்கள் வெற்றி பெற வேண்டும்: கமல்ஹாசன்

தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைவிட, மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.
 தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட நல்லம்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "மக்களுடனான பயணம்' நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது:
 அரசுப் பள்ளிகள் இல்லை, ஆனால், டாஸ்மாக் மதுக் கடைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக சாராயம் ஆறாக ஓடுகிறது. இதை ஒரே நாளில் நிறுத்த முடியாது. இதற்கு இன்னும் ஒரு தலைமுறை ஆகும். மக்கள் நீதி மய்யம் சொல்வதெல்லாம் மது குறைப்பு தான். அரசு செய்ய வேண்டிய வேலையைத் தனியார் செய்கிறார்கள். தனியார் செய்ய வேண்டிய வேலையை அரசு செய்கிறது. இந்த அநியாயத்தை அகற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம். ஆனால், மக்கள் எங்களுக்கு ஓர் உறுதியைத் தர வேண்டும்.
 வாக்குகளை விற்க கூடாது: மொத்தமாக, 5 ஆண்டுகளுக்கு ஐந்தாயிரமோ, பத்தாயிரமோ என ரூபாயை கொடுத்துவிட்டு வெற்றி பெறலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. உங்கள் விலை அதுவல்ல. விற்கவே கூடாது என்பதை, மிகவும் மலிவாக விற்றுவிட்டு செல்லக் கூடாது என்பதுதான் எங்களின் மன்றாடல்.
 இது நம் தமிழ்நாடு. தவறுகளையெல்லாம் நாமே செய்துவிட்டு, நம்முடைய விதி என்று புலம்பி கவலைப்படுவதில் பிரயோஜனம் இல்லை. வாக்குதான் மக்களின் பலமான ஆயுதம். வாக்குகளை விற்றுவிட்டால் ஐந்து ஆண்டுகள் வாழ்க்கையில் காணாமல் போய்விடும். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட மக்கள் வெற்றி பெற வேண்டும்.
 கைக் காட்டிச் செல்லும் நடிகன் அல்ல நான். முழுநேர அரசியல் வாதிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த மூன்று மாதங்களில் மக்களின் மனங்களைத் தொட்டிருக்கிறோம். இதை நாங்கள் கடமையாகச் செய்கிறோம் என்றார் கமல்ஹாசன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com