அரக்கோணம் யார்டில் மின்னணு பொறியியல் பணி நடப்பதால், இன்றும் (நவம்பர் 11), நாளையும் (நவம்பர் 12) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை சேவையில் மாற்றம் செய்யப்படும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல்-கோவைக்கு இயக்கப்படும் கோவை விரைவு ரயில், திருவாலங்காட்டில் 115 நிமிஷம் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல்-ஈரோடுக்கு இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில், திருவாலங்காட்டில் 170 நிமிஷம் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூருக்கு இயக்கப்படும் பெங்களூரு மெயில், கடம்பத்தூரில் 140 நிமிஷம் நின்று செல்லும்.சென்னை சென்ட்ரல்-யஸ்வந்த்பூருக்கு இயக்கப்படும் யஸ்வந்த்பூர் விரைவு ரயில் திருவாலங்காட்டில் 115 நிமிஷம் நின்று செல்லும்.சென்னை சென்ட்ரல்-மும்பை சிஎஸ்டி-க்கு இயக்கப்படும் மும்பை சிஎஸ்டி மெயில், திருவள்ளூரில் 105 நிமிஷம் நின்று செல்லும். மும்பை சிஎஸ்டி-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சென்ட்ரல் மெயில் அரக்கோணத்தில் 15 நிமிஷம் நின்று செல்லும்.
பகுதி ரத்து: மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து அரக்கோணத்துக்கு இரவு 10.10, 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து திருவள்ளூர் வரை மட்டும் இயக்கப்படும்.
திங்கள்கிழமை சேவையில் மாற்றப்படும் ரயில்கள்:
சென்னை சென்ட்ரல்-ஈரோடுக்கு இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில் திருவாலங்காட்டில் 180 நிமிஷம் நின்று செல்லும். இதுதவிர, மேலும் சில ரயில்களின் சேவையில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.