திண்டுக்கல் சிறையில் செல்லிடப்பேசி, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 6 பேர் கைது

திண்டுக்கல் மாவட்ட சிறையில் சனிக்கிழமை நடைபெற்ற திடீர் ஆய்வின்போது, 6 கைதிகளிடமிருந்து செல்லிடப்பேசி மற்றும் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட சிறையில் சனிக்கிழமை நடைபெற்ற திடீர் ஆய்வின்போது, 6 கைதிகளிடமிருந்து செல்லிடப்பேசி மற்றும் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறைக் கைதிகளிடம் புகையிலைப் பொருள்கள், செல்லிடப்பேசிகள் மற்றும் சிறைச் சாலையில் தடை செய்யப்பட்ட சில பொருள்களையும் போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக கைதிகள் அபிபுல்லா (40), சிராஜுதீன் (25), முகமது ஆரிப் உசேன் (22), அக்கீம்(30), ஜான் என்ற அப்துல் காதர்(22), சேக் அப்துல்லா (21) ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களையும், கைதிகளையும் திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில், ஒப்படைத்தனர். அதன்பேரில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் குமரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
 4 பேர் அமமுகவினர்: கைதான 6 பேரில், 4 பேர் கடந்த 4 ஆம் தேதி திண்டுக்கல் ஆர்.எஸ். சாலையில் ஆயுதப்படை போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com