மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் கூறினார்.
ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சஞ்சத் தத் சனிக்கிழமை காலை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சஞ்சய் தத் கூறியது: மரியாதை நிமித்தமாக ஸ்டாலினைச் சந்தித்தேன். சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. கூட்டணி குறித்து ராகுல் காந்தியை மு.க.ஸ்டாலின் விரைவில் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்.