தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது.
புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் வருவாய், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினர் களம் இறங்கி சேதமதிப்பைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி 21 ஆண்கள், 16 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது.
மேலும் தமிழகம் முழுவதும் கஜா புயல் பாதிப்பால் 1 லட்சத்து 27 ஆயிரத்து 448 மரங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.