புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் வேகமாக செய்திருந்தால் பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
புயலால பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தானே, வர்தா, ஓகி வரிசையில் தற்போது கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன்.
அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கஜா புயலால் 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை! என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், பருவ மழை தொடங்கும் முன்பே நீர்நிலைகளை முறையாக தூர்வாரியிருந்தால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்றும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் வேகமாக செய்திருந்தால் பாதிப்புகளைக் குறைத்திருக்கலாம் என்றும் ஸ்டாலின் கூறினார்.