முதல்வர் சென்ற ரயில் நடுவழியில் அரை மணி நேரம் நிறுத்தம்

தமிழக முதல்வர் சென்ற காரைக்கால் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு மறைமலைநகர் அருகே அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின் புறப்பட்டுச் சென்றது.

தமிழக முதல்வர் சென்ற காரைக்கால் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு மறைமலைநகர் அருகே அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின் புறப்பட்டுச் சென்றது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரைக்கால் விரைவு ரயிலில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் இருந்து 
புறப்பட்டார்.
தாம்பரத்தை அடுத்த, மறைமலைநகர் அருகே மின்சார ரயில் மோதியதில் இரண்டு மாடுகள் செவ்வாய்க்கிழமை இரவு இறந்து கிடந்தன. இதையடுத்து, காரைக்கால் விரைவு ரயிலை நிறுத்தி, அந்த மாடுகளை அப்புறப்படுத்தினர். பின்னர் முதல்வர் சென்ற ரயிலுக்கு சிக்னல் கிடைத்ததை அடுத்து அந்த ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com