தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் குமரி ராணுவ வீரர் வீரமரணம்

தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் குமரி ராணுவ வீரர் வீரமரணம்

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.


பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
குமரி மாவட்டம், கோழிப்போர்விளையை அடுத்த பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் ஜெகன் (38). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், தெற்கு சூரங்குடியைச் சேர்ந்த சுபிக்கும் கடந்த ஜனவரி 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது சுபி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், ஜெகன் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்தார். விடுமுறை முடிந்து பஞ்சாப் மாநிலம் சென்றார். அக்.8 ஆம் தேதி (திங்கள்கிழமை) அங்கு தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், தீவிரவாதிகள் சுட்டதில் ஜெகன் உயிரிழந்தார்.
இதுகுறித்து, பருத்திக்காட்டுவிளையில் உள்ள ஜெகனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெகனின் மரணம் அவரது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com