மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் அக்டோபர் 17-ஆம் தேதி கூட உள்ளதாக அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுகவின் உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டம் அக்டோபர் 17-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்குக் கூட உள்ளது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.