திமுகவில் மாற்றம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது

திமுகவில் மாற்றம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
திமுகவில் மாற்றம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது

திமுகவில் மாற்றம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
 திண்டுக்கல்லில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மு.க.அழகிரி தலைமை வகித்து பேசியது:
 நான் திமுகவில் இருந்து சதியால் வெளியேற்றப்பட்டேன். தொண்டர்களுக்காக பேசியதால் வெளியேற்றப்பட்டேன். சமீப நாள்களாக திமுகவினர் பிள்ளை பிடிப்பவர்களை போல், ஆள்களைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனக்கு ஆதரவாக வரும் திமுக தொண்டர்களை பதவி ஆசை காட்டி, அழைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், என்னிடம் இருக்கும் யாரும் பதவிக்காக அலைபவர்கள் அல்ல.
 கருப்பசாமி பாண்டியன் உள்பட இருவர், சமீபத்தில் அங்கு சென்றுள்ளனர். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. கருணாநிதியின் ஆற்றல், திறனுக்கு நான் ஒப்பானவன் இல்லை. என்றாலும் அவரிடமிருந்து சுயமரியாதை மற்றும் உழைப்பைக் கற்றுக் கொண்டேன். இன்று திருமங்கலம் பார்முலா என குறிப்பிடுகிறார்கள். இடைத்தேர்தல்களில் தொண்டர்கள் உழைப்புடன், நான் இணைந்து செய்த பணி திமுகவுக்கு வெற்றி பெற்றுத்தந்தது. அதை மறந்துவிட்டார்கள். மாற்றத்துக்கான வேளை வந்து கொண்டிருக்கிறது. அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். விரைவில் தேர்தல் வரும். அப்போது திறமையைக் காட்டுவோம். தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி, நான் அப்போது தெரிவிப்பேன் என்றார். இந்நிகழ்ச்சியில் அழகிரி ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com