பாலியல் அத்துமீறல்: பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்
பாலியல் அத்துமீறல்: பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்
 இது தொடர்பாக அவர் சுட்டுரையில் கூறியிருப்பது: மீடூ இயக்கம் இன்னும் பல விவாதங்களைக் காண வேண்டும். இதன் மூலம் தொடர்புடையவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உண்மையை இந்த உலகுக்குச் சொல்ல வேண்டும்.
 பாலியல் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முயற்சியை ஆதரிப்போம். முகமூடிக்கு பின் ஒளிந்திருக்கும் முகங்களைப் பெண்கள் அடையாளம் காட்டட்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com