குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், அருவிகளில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து, தடை நீக்கப்பட்டதால், பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.