108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு 

108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈட்டுபட்டுள்ள  ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பினை  வெளியிட்டுள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு 

சென்னை: 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈட்டுபட்டுள்ள  ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பினை  வெளியிட்டுள்ளனர். 

மாநிலம் முழுவதும் அவசர கால மருத்துவ சேவை தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் வழங்குவதில், 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களின் பனி முக்கியமானதாகும். 

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈட்டுபட்டுள்ள  ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

விரைவில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தங்களுக்கு 30% போனஸ் வழங்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் முதலில் நவம்பர் 5-ஆம் தேதி துவங்கி நவம்பர் 8-ஆம் தேதி வரையும், பின்னர் காலவரையறை வேலை நிறுத்தத்திலும் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தங்கள் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com