இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரகப் பாதிப்பு காரணமாக தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாள்கள் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 4 மணி அளவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 215-ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.