ராஜீவ் வழக்கு: 7 பேரின் விடுதலை ஆவணங்கள் ஆளுநரிடம் ஒப்படைப்பு

ராஜீவ் வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை தொடர்பான ஆவணங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழக முதல்வர் பழனிசாமி செவ்வாய்கிழமை வழங்கினார்.
ராஜீவ் வழக்கு: 7 பேரின் விடுதலை ஆவணங்கள் ஆளுநரிடம் ஒப்படைப்பு

ராஜீவ் வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை தொடர்பான ஆவணங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழக அரசு செவ்வாய்கிழமை வழங்கியது.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க, ஆளுநரின் ஆலோசனையுடன் தமிழக அரசு உரிய முடிவு எடுத்துக் கொள்ளலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. 

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இந்த 7 பேரையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான சட்டப்பூர்வ ஆவணங்களை தமிழக அரசு  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com