• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

12:29:43 PM
வெள்ளிக்கிழமை
22 பிப்ரவரி 2019

22 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு தமிழ்நாடு

பசுமைவழிச் சாலைத் திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?: உயர் நீதிமன்றம் கேள்வி

By DIN  |   Published on : 12th September 2018 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

Madras High Court


சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்களை அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 
மீண்டும் விசாரணை: இந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் திட்டத்துக்காக சில இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும், மரங்களை வெட்டி வருவதாகவும் கூறி, அது தொடர்பான புகைப்படங்களைத் தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் கண்டனம்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகவும், கையகப்படுத்தப்படவிருக்கும் நிலங்களை அளவீடு செய்து சப்-டிவிஷன் (உள்பிரிவு) செய்யப்பட்டது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. 
ஏன் தடை கூடாது-நீதிபதிகள்: இந்த அறிக்கையைப் படித்து பார்த்து நீதிபதிகள் கூறியதாவது: உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த போது, கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும் என அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், நிலங்களை அளவீடு செய்து சப்-டிவிஷன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது சில உத்தரவாதங்களைக் கொடுத்து விட்டு, அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது ஏற்புடையது அல்ல. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விருப்பம் போல் செயல்பட்டால், பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது'' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர்கள் புகார்: அப்போது, இந்தத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள மரங்களை உடனடியாக வெட்டி எடுத்துச் செல்லவும், அதற்காக அதிக அளவில் பணம் கிடைக்கும் என அதிகாரிகள் தவறான தகவல்களைத் தெரிவித்து நில உரிமையாளர்களை நிர்பந்தம் செய்வதாகவும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
மரங்களை வெட்டக் கூடாது-நீதிபதிகள்: அதிகாரிகளின் சொந்த நிலங்களாக இருந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வார்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதிகாரிகளுக்குச் சொந்தமான நிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுதான் அதன் பாதிப்பு தெரியும் என கருத்துத் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்துக்காக மரங்களை வெட்ட மாட்டோம் என அரசு அளித்துள்ள உத்தரவாதத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு: இதைத் தொடர்ந்து சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்காக தமிழக அரசு நில அளவீடு செய்தது, ஏற்கெனவே நிலங்கள் கையகப்படுத்தியது தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த திட்டத்துக்காக மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (செப்.14) ஒத்திவைத்தனர். 
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

காதல் மட்டும் வேணா
அகவன் படத்தின் ஆடியோ வெளியீடு
தமன்னா
அருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை 
மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி

வீடியோக்கள்

திருப்பதி செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?
பெங்களூருவில் விமான கண்காட்சி வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்
தடம் படத்தின் டிரைலர் 2
ஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி 
தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்