கடலூர் சிறையில் பாரதிக்கு மரியாதை

பாரதியார் அடைக்கப்பட்டிருந்த கடலூர் கேப்பர்மலை மத்திய சிறை வளாகத்தில் அவரது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
கடலூர் மத்திய சிறையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்த சிறை அலுவலர் கோ.காந்தி.
கடலூர் மத்திய சிறையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்த சிறை அலுவலர் கோ.காந்தி.


பாரதியார் அடைக்கப்பட்டிருந்த கடலூர் கேப்பர்மலை மத்திய சிறை வளாகத்தில் அவரது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
சிறை வளாகத்தில் அமைந்துள்ள பாரதியார் உருவச் சிலைக்கு, சிறை அலுவலர் கோ.காந்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட பாரதியார், 1918-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் நினைவாக சிறை வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com