பெட்ரோல் விலை: செப்.14 -இல் தமாகா போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் செப்டம்பர் 14 -ஆம் தேதி, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் செப்டம்பர் 14 -ஆம் தேதி, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜி.கே.வாசன் தலைமையில் செப்டம்பர் 14 -ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com