திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிந்து, 20-க்கும் அதிகமானோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தி இருதரப்பையும் கலைத்தனர்.
தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் குண்டாற்றில் கரைக்கப்பட்டன.
இந்நிலையில்அங்கு,வெள்ளிக்கிழமை இரவும் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
செங்கோட்டையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பெறப்பட்டுள்ள புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.