மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

துறைமுக விரிவாக்கத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு: கரண் அதானி தகவல்

தமிழகத்தில் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடிக்கு அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளதாக, அதன் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி தெரிவித்தார்.

Updated On :24 ஜனவரி 2019, 3:31 am IST


தமிழகத்தில் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடிக்கு அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளதாக, அதன் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி தெரிவித்தார்.
மாநாட்டின் தொடக்க விழாவில், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி பேசியதாவது:
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக, எண்ணூர் துறைமுகத்தை கட்டி அமைத்தோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காட்டுப்பள்ளியில் புதிய துறைமுகத்தை கட்டமைத்தோம். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 640 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய சூரிய மின் சக்தி திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் எங்களது முதலீடுகள் தொடரும். 
அந்த வகையில், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்ய உறுதி பூண்டுள்ளோம் என்றார் கரண் அதானி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.