ஒரு வாரத்திற்கு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது: மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒரு வாரத்திற்கு எந்த முடிவுகளையும் எடுக்கக்கூடாது  என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
ஒரு வாரத்திற்கு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது: மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழக மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒரு வாரத்திற்கு எந்த முடிவுகளையும் எடுக்கக்கூடாது  என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்த ஆணையம் மின்சார உற்பத்தி, விநியோகம், கொள்முதல் தொடர்பான பிரச்னைகளை தீர்த்து வைக்கிறது. இந்த ஆணையத்தில் 3 உறுப்பினர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2018- இல் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்களாக நியமிக்கின்றனர். 
இந்நிலையில் தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒரு உறுப்பினர் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்துக்கு புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அந்த காலியிடத்துக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினராக நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினரான சென்னையைச் சேர்ந்த நாகல்சாமி என்பவரும் தன்னை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு  நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நாகல்சாமி, 2014-இல் தமிழக மின்வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் எடுத்த சில ஒப்பந்தங்கள், 2014-ஆம் ஆண்டில் இருந்து 15 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளது. அதனால் மின் வாரியத்திற்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் அதை நான் ஏற்கவில்லை. என்னுடைய ஒப்புதலின்றி மற்ற இரு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததன் பேரில் அந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வரும் 10-ஆம் தேதி வரை எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர் நாகல்சாமிக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டு, வழக்கை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com