பள்ளியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் 161 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 7 பேர் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளிக்கு காவலாளி இல்லை என்பதால், பள்ளியில் எட்டாம்  வகுப்பு படிக்கும் மாணவி துர்காதேவி காலையில் பள்ளியைத் திறப்பதும், மாலையில் பள்ளியை மூடிவிட்டு சாவியை வீட்டுக்கு எடுத்துச் செல்வதும் வழக்கம். இந்த நிலையில், புதன்கிழமை காலை 8.45 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர், ஆண்கள் கழிப்பறைக்குச் சென்றபோது, அங்கு தூக்கில் தொங்கியபடி மாணவி துர்காதேவி இறந்து கிடந்தாராம்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், துர்காதேவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை ஏழுமலை அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் வெற்றிவேல் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com