ஆசிரியர் தகுதித் தேர்வு: 5.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இரு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 5.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இரு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 5.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றை எழுதுவதற்கு தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று ஏப்ரல் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடுவினை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
 அதன்படி விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயரதிகாரிகள் கூறியது: கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்கு சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் விண்ணப்பதாரர்களும் மற்றும் தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 5 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com