தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்வதற்காக கொண்டுச் செல்லப்பட்ட ரூ.40 லட்சத்தை வாகனச் சோதனையின் போது பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படை, கண்காணிப்புக்குழுவினர் தொடர்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, திருச்செந்தூர் அருகே உள்ள காயமொழி மத்திமான்விளையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். உடன்குடி கொட்டங்காடு திமுக பொதுக் குழு உறுப்பினர் வசிகரன், அவரது மகன் அஜித் ஆகியோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.40 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர்.