சென்னை மயிலாப்பூர் டாஸ்மாக் கடைக்கு சீல் வைப்பு

சென்னை மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மதுபானம் விற்ற டாஸ்மாக் கடைக்கு சீல் வைத்தனர்.
சென்னை மயிலாப்பூர் டாஸ்மாக் கடைக்கு சீல் வைப்பு


சென்னை மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மதுபானம் விற்ற டாஸ்மாக் கடைக்கு சீல் வைத்தனர்.

தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று, கூட்டம் அலைமோதியது. 

இதனிடையே, சென்னை மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மதுபானம் விற்ற டாஸ்மாக் கடையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் டாஸ்மாக் கடைக்கு சீல் வைத்தனர்.

தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைககளில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை நடத்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com