ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பிறந்த நாளை ஒட்டி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநருக்கு அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தின் விவரம்: தங்களது பிறந்த தினமான இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் தாங்கள் பல பல ஆண்டுகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், அமைதியான மனநிலையையும் பெற்று நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த முதல்வருக்கு ஆளுநர் புரோஹித் நன்றி தெரிவித்தார்.