வாக்காளர் நடத்தை குறித்து தேர்தல் மறுசீரமைப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
வாக்காளர்களைப் பற்றி அறிந்து கொள்ள சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அதில் ஒரு சில கேள்விகள் இப்படி இருந்தன.
அதாவது,
அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்
2018 ஆய்வின்படி, அதிகப்படியான மக்கள் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கும் போது அவர் சம்பந்தப்பட்ட கட்சி முக்கியமான காரணியாக உள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் வேட்பாளரின் தரம். அதாவது அவரது நன்னடத்தையைக் கருத்தில் கொள்கிறார்கள்.
முதல்வர் அல்லது பிரதமர் யார் என்பதைப் பொறுத்து. இதுவும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது.
அடுத்து, பணம், பரிசு பொருட்கள் போன்றவையும் முக்கியமான காரணியாக உள்ளது.
72 சதவீத மக்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் கொடுப்பது சட்டவிரோதம் என்பது தெரிந்திருக்கிறது.
98% வாக்காளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடாது என்றே கருதுகிறார்கள்.
37% வாக்காளர்கள், குற்றப் பின்னணி இருந்தாலும், அவர் மற்றபடி நன்றாக செயல்படுவதையும் கருத்தில் கொள்ளலாம் என்கிறார்கள்.
ஒரு குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர் வெற்றி பெறக் காரணங்கள் என்று வாக்காளர்கள் சில காரணிகளை கூறுகிறார்.
அது என்னவென்றால்,
இவையெல்லாம் வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிக்கும் போது ஒரு வேட்பாளரை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதற்கான சின்ன உதாரணம் மட்டுமே. இதுவே பொதுவான விதியல்ல.