அறந்தாங்கி: வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சலுகை எனக்கு இல்லையா? என்று கோரி வாக்குச்சாவடியில் இளம்பெண் ஒருவர் தர்ணா இருந்த சம்பவம் நடந்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள எருக்கலங்கோட்டை என்னுமிடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தது.
அங்கு வாக்களிக்க வந்த தேன்மொழி என்னும் இளம்பெண்னுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால், வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதேபோல் சென்னையில் வியாழன் காலை வாக்களிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் பட்டியலில் அவரது பெயர் இல்லை. ஆனாலும் அங்கிருந்த தேர்தல் அதிகாரியின் சிறப்பு அனுமதியின் பேரில் அவருக்கு வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டது.
அதேபோல தனக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி தேன்மொழி வாக்குச் சாவடிக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையிலும் அவரது தர்ணா தொடரவே அதிகாரிகளை அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.