தேர்தல் தொடர்பான புகார்களை மின்னஞ்சல் வாயிலாக சிறப்பு செலவின பார்வையாளர் மது மகாஜனிடம் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல்18) நடைபெறுகிறது. இந்தத் தேர்தல்களுக்கு சிறப்பு செலவின பார்வையாளராக மது மகாஜனை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை பொது மக்கள் சிறப்பு செலவினப் பார்வையாளரிடம் மின்னஞ்சல் (tnsplobserver2019@gmail.com) மூலமாகத் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.