திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளியன்று கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.  

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளியன்று கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.  

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் என்னும் கிராமத்தில் வெள்ளியன்று விவசாய பணிகளுக்கு  கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்தப்பணியில் ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மேலிருந்து கயிறு ஒன்றைக் கட்டிக் கொண்டு அவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விழுந்ததில் கிணற்றில் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பெரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com