இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சாதிக் கலவரத்தை தூண்டுவோர் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மதுரையில் இயந்திர அறைக்குள் அனுமதியின்றி அதிகாரி சென்றது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.
பெண் வாட்டாட்சியரை ஆளுங்கட்சி அனுப்பிவைத்தது போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகின்றன. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது. அங்கு அமைதி திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.