திருச்சி மாவட்டம், துறையூர் முத்தையம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளாா்.
துறையூா் கோயில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தோா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதுபோன்று, 7 பேர் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்த 12 பேருக்கும் தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.