தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு அளித்தனர்.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
அரவக்குறிச்சி - வி.வி.செந்தில்நாதன்
ஓட்டப்பிடாரம் (தனி) - கே.மோகன்
சூலூர் - கந்தசாமி
திருப்பரங்குன்றம் - எஸ். முனியாண்டி