பாஜகவை விமர்சித்த திருமாவளவனுக்கு தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்தது. அப்போது பேசிய திருமாவளவன், பாஜகவும், பாமகவும் அனைத்து மரபுகளையும் மீறி ஜனநாயகத்தைச் சிதைத்துள்ளன. பாஜகவிடம் இருந்து அப்பாவி இந்துக்களையும், பாமகவிடம் இருந்து அப்பாவி வன்னியர்களையும் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித் தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டரில்,
திருந்திபடி என்று சொல்லாமல் திருப்பி அடி என வன்முறை அரசியலுக்கு வழிகாட்டும் விசிக திருமாவிடம் இருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டியது நம்கடமை.சட்டமன்ற/ பாராளுமன்ற உறுப்பினராக அடித்தட்டு மக்களுக்காக நீங்கள் கொண்டுவந்த ஒரு திட்டம் சொல்லமுடியுமா?பாஜக விமர்சனம் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில்,
சரக்கு மிடுக்கு பேச்சிற்கு சொந்தக்காரரான திருமாவளவன் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றி பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இவர் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆவார். சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தால் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்துகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.