இலங்கையில் வழிபாட்டு தலமான கிருஸ்துவ ஆலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பை தொடா்ந்து தமிழகத்தில் உள்ள வழிப்பாட்டு தலங்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் பக்தர்களின் உடமைகளை மெட்டல் டிடக்டர் (வெடிகுண்டு சோதனை கருவி) மூலம் சோதனை செய்யபட்ட பிறகே கோவில்களுக்கு அனுமதிக்கபடுகிறார்கள்.
ஏற்கனவே ஸ்ரீரங்கம் கோவில்களில் நான்கு நுழைவு வாயிலில் வெடிகுண்டு சோதனை அமைக்கபட்டுயிருக்கிறது. தற்போது கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு சோதனை செய்யபட்டு வருகிறது.