சென்னை: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கு விளக்கம் கேட்டு அவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆதாரங்களோடு புகார் அளித்திருந்தார். அதோடு, மூன்று பேரும் அமமுகவில் பதவி வகிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்களாக இருந்து கொண்டு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்து விளக்கம் கேட்டு அவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.