மருத்துவக் கல்வி இயக்ககத்தின் பொறுப்பு இயக்குநராக டாக்டர் நாராயணபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு அப்பதவியை வகித்து வந்த டாக்டர் எட்வின் ஜோ புதன்கிழமை ஓய்வு பெற்றதையொட்டி, அப்பொறுப்பு நாராயண பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய நியமனம் தொடர்பாக சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷிடம் கேட்டபோது, புதிய மருத்துவ கல்வி இயக்குநர் விரைவில் நியமிக்கப்படுவார். பொறுப்பு இயக்குநராக டாக்டர் நாராயணபாபு செயல்படுவார் என்றார்.
புதிய மருத்துவக் கல்வி இயக்குநரை நியமிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பரிசீலனைப் பட்டியலில் நாராயணபாபு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லுôரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுôரி முதல்வர் வசந்தாமணி ஆகியோரின் பெயர்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.