குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: தூக்குத் தண்டனைக்கு விஜயகாந்த் வரவேற்பு

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: தூக்குத் தண்டனைக்கு விஜயகாந்த் வரவேற்பு


குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கோவையில் கடந்த 2010-ஆம் ஆண்டு சிறுமி முஸ்கான், சிறுவன் ரித்திக் ஆகிய ஆகியோரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
அதுபோல, வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் போக்úஸா சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com