காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது  ஸ்டாலின் 

காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை சட்டத்திற்கு புறம்பாக  அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது  ஸ்டாலின் 

சென்னை: காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை சட்டத்திற்கு புறம்பாக  அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை சட்டத்திற்கு புறம்பாக  அடைத்து வைத்திருப்பது,  ஏற்க இயலாததும் அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும்.

அவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது எந்த விதமான தண்டனை அளிக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com