காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அத்திவரதர் தரிசனம் செய்ய நாளை எந்தவித பாஸ்களும் செல்லாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதில் விஐபி, விவிஐபி, ரூ.300 மற்றும் ரூ.500 கட்டண தரிசனங்கள் உள்ளிட்ட எந்த சிறப்பு தரிசனமும் நாளை கிடையாது. பக்தர்கள் பொதுதரிசனம் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் தரிசனம் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவுடன் நிறைவுபெற உள்ளது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.