தமிழக முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி வரும் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் நான்கு நாள்கள் சேலத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, வரும் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி சேலம் வருகிறார். பின்னர் அவர் ஆகஸ்ட் 21 -ஆம் தேதி வரை சேலத்தில் தங்கி, அரசு சட்டக் கல்லூரி திறப்பு, எடப்பாடியில் நீதிமன்றம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற உள்ளார்.