காவலர் எழுத்துத் தேர்வு:  இணையதளத்தில் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு வெளியீடு

காவலர் எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


காவலர் எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழக காவல்துறையின் ஆயுதப்படையில் உள்ள 2,465 பணியிடங்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் உள்ள 5,963 பணியிடங்கள் என இரண்டாம் நிலைக் காவலர்கள் பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் 191 தீயணைப்போர் பணியிடங்கள், சிறைத்துறையில் உள்ள 208 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடங்கள்  என மொத்தம் 8,826 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்படி ஆகஸ்ட் 25-ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. எழுத்துத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள், பயனர் அடையாள எண், கடவுச் சொல்லை பயன்படுத்தி, தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, உரிய செலுத்து சீட்டு பெற்றிருந்தும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாத விண்ணப்பதாரர்கள், தேர்வு குழுமத்தின் உதவி மையத்தை 044-40016200 என்ற தொலைபேசி எண்ணிலும், 97890 35725 என்ற செல்லிடப்பேசி எண்ணும் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com